நாளை முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Climate Change
                
                                                
                    Weather
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (10) முதல் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்த பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
வானிலை மாற்றம்
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |