கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 13, 2024 09:39 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் மற்றுமொரு வேட்பாளர் தமது கட்டுப்பணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தியுள்ளார்.

கால அவகாசம்

இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல் | Time Limit For Payment Of Bond

வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் இராஜகிரிய பகுதியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW