வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் அச்சுறுத்தல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விடயம் தொடர்பில் எமது ஊடகம் தொடர்புகொண்ட போது இந்த விடயத்தை காங்கேசன்துறை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |