நாட்டில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகள் வருகை!
இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றுலா அதிகார சபை மேலும் குறிப்பிடுகையில்,
இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்..
சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், இந்தியாவிலிருந்து 34,006 பேரும், பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |