வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 30, 2024 07:34 AM GMT
Harrish

Harrish

முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் இன்று(30.07.2024) மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயது ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

நேற்று (29.07.2024) பிற்பகல் 20 இலட்சம் ரூபா பணத்தினை கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று(30) அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு | The Youth Was Recovered Dead Mullaitivu

எனினும், இளைஞனை காணாததையடுத்து வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் சடலம் கிடப்பது அடையாளம் காணப்பட்டு பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன் குளம் பொலிஸார் நீதிபதி முன்னிலையில் சடலத்தினை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு | The Youth Was Recovered Dead Mullaitivu

இதேவேளை, சடலடமாக மீட்கப்பட்டுள்ள இளைஞன் கனடாவிற்கு செல்வதற்காக தயாராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW