தம்பலகாமம் பிரதேச சபையை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இத்தேர்வில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் போட்டியிட்ட எச்.தாலிப் அலி, 8 வாக்குகளுடன் திறந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வாக்கெடுப்பிலான தெரிவு
இந்த வாக்கெடுப்பில் மொத்தமாக 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தேசிய மக்கள் சக்தி (NPP) – 3
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (AIMC) – 2
- இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 2
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1
- பொதுஜன ஐக்கிய முன்னணி (PUF) – 1
- ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 1
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) – 1
அதேவேளை, மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இச்சபையில் உறுப்பினர்கள் காணப்பட்டது.
இந்நிலையில், தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எச்.தாலிப் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எஸ்.எம்.சுபியான், தேசிய மக்கள் சக்தியிலிருந்து நஜிபுல்லாஹ் ஆகியோர் போட்டியிட்டனர்.
அதன்படி, உப தவிசாளராக விஜயானந்தம் விஜயகுமார் திறந்த வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார். இந்த திறந்த வாக்கெடுப்பின் மூலம், ஐக்கிய மக்கள் சக்தி சபையை கைப்பற்றியது முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த புதிய நிர்வாக அமைப்பின் மூலம், பிரதேச அபிவிருத்திக்கான பணிகள் புதுமையான திசையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




