நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றங்கள்

Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Mar 09, 2025 01:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் நாளை(10) மற்றும் நாளை மறுதினம்(11) மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரணை செய்யாத பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்! வெளியான தகவல்

முறைப்பாட்டை விசாரணை செய்யாத பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்! வெளியான தகவல்

தற்காலிக மாற்றம் 

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றங்கள் | Temporary Changes In Tomorrow S Weather

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்கள் தொடர்பிலான அறிவித்தல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்கள் தொடர்பிலான அறிவித்தல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW