சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை

Sri Lanka Police
By Mayuri Aug 14, 2024 10:43 AM GMT
Mayuri

Mayuri

குளவி தாக்குதல் அபாயம் காரணமாக சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் குளவி தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை

எவ்வாறாயினும் 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீகிரிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை | Temporary Ban On Entry To Sigiriya Hill

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW