வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இன்று (14) கலந்துரையாடல் நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி நேற்று (13) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வேலைநிறுத்தம்
இதில், எதிர்வரும் கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நியாயமற்ற கல்வியை உருவாக்குவதற்காக அல்ல, நாட்டில் அனைவருக்கும் நியாயமான கல்வியை உருவாக்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியமிக்கப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |