அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது

Anuradhapura
By Mayuri Aug 01, 2024 10:33 AM GMT
Mayuri

Mayuri

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஜேபுர பகுதியில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் ஐவர் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவர் கைது

அம்பலாந்தோட்டை, திக்வெல்ல மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 33, 40, 46 மற்றும் 50 வயதுடைய ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது | Suspects Arrested In Anuradhapuram

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW