நாட்டில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புகள் : வெளியான அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 494 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு, குறித்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திடீர் சுற்றிவளைப்புகள்
அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய சோதனைகள் நடந்து வருகின்றன. அதன்படி, நேற்று (08) 494 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 494 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவற்றில், 142 சோதனைகளில் 854 கிராம் 331 மில்லிகிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் 169 சோதனைகளில் 354 கிராம் 747 மில்லிகிராம் ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
168 சோதனைகளில் 15 கிலோ கஞ்சாவும், 3 மற்ற சோதனைகளில் 9,925 மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |