மூதூரில் திடீர் சுற்றிவளைப்பு
Trincomalee
Sri Lanka
Eastern Province
By Rukshy
13 days ago

Rukshy
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூதூர் சுகாதார பணிமனைக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் இன்று (11) காலை திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தோப்பூர் பிரதேசத்திலுள்ள தேநீர் கடைகள், வெதுப்பகங்கள், பலசரக்குக் கடைகள் பொது சுகாதார பரிசோதர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத
இதன் போது உணவுப் பாதுகாப்பை பேணாத, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத, காலவதியான உணவுகளை வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




