சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி இன்று (03) திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
திடீர் சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.அஸ்லம், ஏ.வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களினால் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது நோன்பு கஞ்சி தயாரித்தல், விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் சம்பந்தமான அறிவுரைகள் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


