நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்

Sri Lanka Police Trincomalee Eastern Province Death
By Rukshy Sep 16, 2025 06:08 AM GMT
Rukshy

Rukshy

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (15வயது) எனவும் தெரியவந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச உருவாக்கிய கோடீஸ்வரர்கள்

மகிந்த ராஜபக்ச உருவாக்கிய கோடீஸ்வரர்கள்

மேலதிக விசாரணை

வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாக நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இரவு 8.15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம் | Student Death While Swimming

உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு