திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது
திருகோணமலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
உப்புவெளி பிரதேசத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
மேலும், கைதான மூவரும் 22,25,28 வயதுடைய மூன்று இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மூவரினாலும் திருடப்பட்டு அடகு வைபக்கப்பட்ட ரூ.165,000 ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த இந்த விசாரணையில், பதில் பொறுப்பதிகாரி சம்பத் தலைமையில் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகிய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |