அம்பாறை பொலிஸ் படுகொலை நினைவு தினம் முன்னெடுப்பு

By Rakshana MA Jun 12, 2025 08:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக அம்பாறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாப்பிடும் முறை: சாப்பிடுவதன் சுன்னத்துகள் (நபிகளார் வழிகாட்டல்)

சாப்பிடும் முறை: சாப்பிடுவதன் சுன்னத்துகள் (நபிகளார் வழிகாட்டல்)

நினைவஞ்சலி...

மேலும் இதன் போது, இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாறை பொலிஸ் படுகொலை நினைவு தினம் முன்னெடுப்பு | Srilanka Police Commemoration

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

'எழுதப்படாத வசனங்கள்' குறும்பட திரையிடல் நிகழ்வு

'எழுதப்படாத வசனங்கள்' குறும்பட திரையிடல் நிகழ்வு

சுட்டு படுகொலை

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ,பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள்.

அம்பாறை பொலிஸ் படுகொலை நினைவு தினம் முன்னெடுப்பு | Srilanka Police Commemoration

அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery