திருகோணமலையில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தி

Eastern Province Crime
By H. A. Roshan Jun 02, 2025 11:45 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

கசிப்பு உற்பத்தியும் விற்பனையையும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.

குறித்த விடயத்தினை ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உடனடியாக இவ்விடயத்தில் கவனம் எடுத்து கட்டுப்படுத்தி நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்கையில் ஒளியேற்ற முன்வர வேண்டும்.

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் கைது

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் கைது

மக்களின் பிரச்சனை

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதனால் கட்சிகளின் நலனை காட்டிலும் தமிழ் மக்களின் நலனை முதன்மைப்படுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டி மக்களின் அத்தியவசிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முன்வரவேண்டும்.

திருகோணமலையில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தி | Srilanka Illicit Liquor Production

திருகோணமலை - உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சிறிய கட்டிடத்தில் பனை உற்பத்திப் பொருட்கள் மட்டும் விற்பனை செய்வதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பிரதேச மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பணத்தை மட்டும் நோக்காக கொண்டு வேறு மாவட்ட ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவைகள் தொடர்பாக உப்புவெளி பிரதே சபையின் ஆட்சியை அதிகாரத்தை எடுத்தவுடன் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று இப்பிரதேச மக்கள் சார்பில் எதிர்பார்க்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW