அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
Money
Nalin Hewage
By Rakshana MA
அரச ஊழியர்களுக்கான சம்பளம் அடுத்த வருடம் அதிகரிக்கப்படும் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை (Ambalangoda) பிரதேச செயலகத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அரச ஊழியர்கள் தங்கள் பணிகளை முறையாகச் செய்தால், நாடு வளர்ச்சியடையும்.
நாம் வேலை செய்வதை விளம்பரப்படுத்தக் கூடாது. அரசாங்கம் கொடுக்கும் வேலையைச் செய்தால் போதும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |