பௌத்த நாடாக இல்லாவிட்டால் முஸ்லிம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது..! மெளலவி மிப்லால்
நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம். அதை நாங்கள் வரவேற்கிறோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தவிசாளர் மெளலவி மிப்லால் குறிப்பிட்டார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும், "இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என்றார்.