கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather Thunder
By Rakshana MA Jun 10, 2025 11:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் இன்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான சிவப்பு எச்சரிக்கையை அறிவிக்கபட்டுள்ளது.

குறித்த தகவலை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

எச்சரிக்கை

அத்துடன், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் (60-70) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு! | Sri Lanka Red Alert

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை கடல் பகுதிகளுக்குள் பயணம் செய்ய வேண்டாம் என்று கடல் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடும் சமூகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய திட்டம் நடைமுறை

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய திட்டம் நடைமுறை

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW