யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 03, 2024 07:38 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் 732 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

யுக்திய நடவடிக்கை

இதனையடுத்து, சந்தேகநபர்களிடமிருந்து 260 கிராம் 76 மில்லி கிராம் ஹெரோயின், 250 கிராம் 02 மில்லி கிராம் ஐஸ், 21,139 கிராம் 574 மில்லி கிராம் கஞ்சா , 168 போதை மாத்திரைகள் மற்றும் 1,906 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது | Sri Lanka Police Investigation Crime

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல்

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW