மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

Ministry of Education Excise Department of Sri Lanka Sri Lankan Schools School Children
By Rakshana MA Jun 21, 2025 03:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் பரீட்சை முறைமைகளை மாணவர்களுக்குப் பொருத்தமான வகையில் மாற்றும் முயற்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கும் அதிகமான மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்துடன், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த.சாதாரண தர, மற்றும் உயர்தர பரீட்சைகளில் முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறான மாற்றங்கள் மூலம், பரீட்சை முறைமையில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து, மாணவர்கள் சுதந்திரமாகவும், பயனுள்ள முறையிலும் கற்றலுக்கு தயாராகும் சூழ்நிலையை உருவாக்குவதே குறிக்கோளாக உள்ளது.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

பரீட்சை முறை மாற்றங்கள் 

மேலும், மாறிவரும் உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப, கல்வி நடவடிக்கைகள் நடைமுறை வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும்.

மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு | Sri Lanka Plans Exam Reforms

இதற்காக புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பரீட்சை வடிவங்களில் விரிவான மாற்றங்கள், புதிய கற்றல் நோக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும்.

இவை அனைத்தும், அடுத்த சில ஆண்டுகளுக்குள் கட்டுப்பாடாக செயல்படுத்தப்படும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானை இடைவிடாது தாக்கும் இஸ்ரேல்..!

மத்திய ஈரானை இடைவிடாது தாக்கும் இஸ்ரேல்..!

பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை

பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW