பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
Election
Local government Election
By Rakshana MA
வாக்குச் சாவடிகளைச் சுற்றி தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறு அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்களித்துவிட்டு அமைதியாக வெளியேறுமாறு மக்களை அறிவுறுத்துகிறது.
விசேட எச்சரிக்கை
வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இன்றும் நாளையும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் பொலிஸ் நடமாடும் ரோந்துகள் இயங்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |