விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Airport
By Kamal Sep 21, 2024 05:20 PM GMT
Kamal

Kamal

ஊரடங்கு சட்ட நேரத்தில் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்ட காலத்தில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயண ஆவணங்களை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு 

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து வீடுகளுக்கு திரும்பும் பயணிகளும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளும் இவ்வாறு பயண ஆவணங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Special Announcement For Passengers

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாடு தழுவிய அடிப்படையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் தங்களது வெளிநாட்டு பயணம் குறித்த பயண ஆவணங்களை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.