ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

Puttalam Srilanka Muslim Congress Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 11, 2024 09:11 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் எடுக்கின்ற முடிவிற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக புத்தளம் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து நேற்று இரவு (10) புத்தளத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் வினவினார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

நாட்டினுடைய நலன்

இதன்போது, நாட்டினுடைய நலன், நாட்டினுடைய பொருளாதாரம் அதேபோல் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாடு மற்றும் ஆதரவைத் தேடி நிற்கின்ற இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன் | Sl President Election People Support Acmc Dicision

இருப்பினும் இறுதியாக எதிர்வருகின்ற 14ஆம் திகதி மக்கள் காங்கிரஸினுடைய உயர்பீடம் எடுக்கின்ற முடிவிற்கு ஒத்துழைப்பை தருவதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

ரணிலின் வெற்றிக்காக 150 அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு

ரணிலின் வெற்றிக்காக 150 அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW