சீதுவ துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் பலி
Sri Lanka Police
Gun Shooting
By Shadhu Shanker
சீதுவையில் இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தையல் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்தபோது, பாதிக்கப்பட்டவர் சுடப்பட்டதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காயங்களுக்குள்ளான பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிசூட்டுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த காரணமும் வெளிவரவில்லை.
சம்பவம் குறித்து சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.