மட்டக்களப்பில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

Batticaloa Sri Lankan Schools Education
By H. A. Roshan May 29, 2025 08:30 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

மட்டக்களப்பில் கல்குடா பகுதியில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் களுவன்கேணி கிராமங்களில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்ட, சீரற்ற வரவுள்ள மாணவர்களை வீடுவீடாகத் தேடிச் சென்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வூட்டப்பட்டது.

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

இடைநிறுத்தலுக்கான காரணங்கள் 

இவ்வாறு மாணவர்கள் பாடசாலை வரவில் பின்னடைவதற்கும் இடை விலகுவதற்கும் மாணவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் வறுமை, பொருளாதார நெருக்கடி இவற்றின் காரணமாக பிள்ளைகளைக் கைவிட்டு தாய்மார் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வது, பெற்றோரின் பிரிவு, பதிவு செய்யப்படாத திருமண உறவுகள், கல்விபற்றிய போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை தகவல் திரட்டு ஆய்வின்போது காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் | School Dropout Awareness Srilanka Batticaloa

இந்நிலையில், வறுமை காரணமாக கல்வி பாதிக்கப்பட்டுள்ள சில மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி ஊக்குவிப்புக்களை வழங்க சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பு முன்வந்துள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு பிரிவு, கிராம அலுவலர்கள், சேர்க்கிள் இளம் பெண்கள் நிறுவனத்தின் களுவன்கேணி பரிந்துரை வலையமைப்பிலுள்ள உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.  

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery