சாய்ந்தமருது பிரதேச உணவு கையாளும் நிறுவனங்கள் மீது அதிரடி பரிசோதனை

Sri Lankan Peoples Eastern Province Public Health Inspector
By Rakshana MA Jun 05, 2025 10:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் பல இன்று (05) அதிரடியாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த சோதனை நடவடிக்கையானது, உலக உணவுப் பாதுகாப்புத் தினமான எதிர்வரும் 7ஆம் திகதி முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது உணவுப் பொருட்களின் தரம், பராமரிப்பு நிலை, சமையலறையின் சுத்தம் சுகாதாரம், உணவு செய்முறை முறைகள் மற்றும் வேலை செய்பவர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் போன்றன கண்காணிக்கப்பட்டன.  

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

அதிரடி பரிசோதனை

குறித்த சோதனை நடவடிக்கையானது, மூன்று நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நிறக் குறியீடுகள் இல்லாத உணவுகள், முறையாக பொதி செய்யப்படாத உணவுகள், மருத்துவ சான்றிதழ் இல்லாது உணவு கையாளும் நபர்கள் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டு உணவுகள் கைப்பற்றப்பட்டதுடன் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச உணவு கையாளும் நிறுவனங்கள் மீது அதிரடி பரிசோதனை | Sainthamaruthu Food Safety Raid

உணவுப் பாதுகாப்பு என்பது பொதுமக்களின் உடல் நலத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும். உணவகங்களின் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காதவர்களின் மீது இனி வரும் காலங்களில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

இச்செயற்பாட்டில், சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குச்சவெளி துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்

குச்சவெளி துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்

பகிடிவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி அமைச்சு அதிரடி முடிவு

பகிடிவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி அமைச்சு அதிரடி முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGallery