புதிய ஜனாதிபதி தெரிவு! அடுத்தடுத்து பல பதவி விலகல்கள்

Anura Kumara Dissanayaka Dinesh Gunawardena Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 23, 2024 08:19 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து

பதவி விலகல்

முன்னதாக நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதி தெரிவு! அடுத்தடுத்து பல பதவி விலகல்கள் | Resignation Of Ministers

இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன தன் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன்! புதிய ஜனாதிபதி அநுர

அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன்! புதிய ஜனாதிபதி அநுர

அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக லக்ஸ்மன் நிபுணராச்சி

அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக லக்ஸ்மன் நிபுணராச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW