ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka IMF Sri Lanka Sri Lanka Government
By Laksi Apr 07, 2025 12:37 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய நான்காவது மதிப்பாய்வு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடலொன்று இங்கு நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார சவால்கள் 

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான நிகழ்ச்சியின் போது, ​​இலங்கையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் | Representatives Of Imf Meet With Anura

அத்தோடு, அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான துணை இயக்குநர் சஞ்சய பந்த், மூத்த தூதர்கள் பீட்டர் ப்ரூயர் மற்றும் இவான் பாபஜோர்கியோ உள்ளிட்ட குழுவினரும், தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW