சிவப்பு சீனி ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை பல்வேறு வகையான கரிம சீனியாக ஏற்றுமதி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் பேச்சு வார்த்தை முன்னெடுத்துள்ளது.
குறித்த விடயத்தினை தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று(03) தெரிவித்தார்.
அதன்படி, சீனா, ஈரான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனி ஏற்றுமதி
உலக சந்தையில் கரிம சீனிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியில் கரிம சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அவர், சீனித் தொழிற்சாலைகளின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழி சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |