பானம கடலலையில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்கள் மாயம்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Russia
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    பானம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானம கழிமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் குளிக்கச் சென்றவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(15) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மத்திய பானம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலலை குளிப்பு
இதேவேளை, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவையில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரஷ்ய தம்பதி மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்டவர்கள் 47 மற்றும் 46 வயதுடைய தம்பதி ஆவார்கள்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |