ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சீட்டு கிடைத்தது! ரஞ்சன்

Anura Kumara Dissanayaka Ranjan Ramanayake
By Mayuri Oct 03, 2024 06:24 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தனக்கு வாக்குச் சீட்டு கிடைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ராமநாயக்க, நான் தேசிய மக்கள் சக்தி தலைவர்களை அணுகினேன், அவர்கள் எனது குடியுரிமைகளை மீட்டெடுப்பதற்கான எனது கோரிக்கைக்கு செவிசாய்த்தனர்.

அனுரவுடன் தொலைபேசியில் பேசிய ரஞ்சன்

நான் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியிலும் பேசினேன். நான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்தேன்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சீட்டு கிடைத்தது! ரஞ்சன் | Ranjan Ramanayake Statement

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க எனக்கு ஒரு வாக்குச் சீட்டு கிடைத்தது. இருப்பினும், நான் வெளிநாட்டில் இருந்ததால் என்னால் வாக்களிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவரது குடியுரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால், பொதுத் தேர்தலில் NPP யில் போட்டியிடுவீர்களா என்று வினவிய போது, அது பற்றி தற்போதே கருத்து தெரிவிக்க முடியாது என ராமநாயக்க கூறியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW