ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Jul 24, 2024 03:21 AM GMT
Rukshy

Rukshy

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார் என்று ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பிலான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பிலான முன்னறிவிப்பு

வாக்காளர்கள் 

மேலும் கூறுகையில்,'' அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்திருந்தாலும் வாக்காளர்கள் மாறப் போவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள் | Rani Got Most Votes In Presidential Election

நமது நாட்டு மக்கள் செய்நன்றி மறக்காத நன்கு சிந்தித்து பணியாற்றுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஆதரவு

கடந்த நெருக்கடியின் போது, ​​மக்களிடம் பணம் இருந்தது.ஆனால் வாங்குவதற்கு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது அவ்வாறான நிலை இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள் | Rani Got Most Votes In Presidential Election

எனினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை. 

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம்.

மேலும் கட்சி நிறமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மக்களும் தீர்மானித்துள்ளனர்''எனவும் கூறியுள்ளார்.  

சா/த பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சா/த பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW