நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 06, 2024 02:38 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (06) முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல்

காலை வேளையில் மழை 

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை | Rainy Climate In Most Parts Of The Country

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW