தினந்தோறும் குர்ஆனை ஓதி வாருங்கள்
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))
இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது.
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))
நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகிறான். (முஸ்லிம்: உமர் பின் கத்தாப்(ரலி))
குர் ஆனை மனனமிட்டு (அதை ஓதி) பேணி வாருங்கள், ஏனெனில் உன் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்து) மறந்துவிடக்கூடியதாகும்.
இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனமிட்ட ஒருவர் அது மறந்து விடாதிருக்க தொடர்ந்தும் ஓதி வருமாறு கட்டளைப் பிறப்பித்துள்ளார்கள். இதனை நபியவர்கள் கட்டிவைக்கப்பட்ட ஒட்டகம் அவிழ்த்து விடப்பட்டதும் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதைவிடவும் மிகவும் வேகமாக அல்குர்ஆன் மறந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆகவே அதனைப்பேணி ஓதி வந்தால் அது அவருடன் இருக்கும், இல்லாது விட்டால் அவரிடமிருந்து மறைந்து விடும்.
தனக்குள் மாத்திரம் அல்குர்ஆனிய அறிவை வைத்துக்கொள்ளாது பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே மிகவும் சிறப்பான அறிஞராவார்.
அல்குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பது என்பது அதனை முறையாக ஓதுதல், அதன் கருத்துக்களையும் சட்டதிட்டங்களையும் அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'. அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு நன்மை உண்டு எனவும், அது அதே போன்று பத்து மடங்காக பன்மடங்காக்கப்படும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும்.
(எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி))
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |