சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!
Sri Lankan Peoples
Eastern Province
Kalmunai
By Rakshana MA
சாய்ந்தமருது(Sainthamaruthu) பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமையில் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில்நேற்று(01) நடைபெற்றுள்ளது.
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வானது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வுக்கு பொலன்னறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட பலர் அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |