மன்னாரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Mannar
By Mayuri Aug 30, 2024 11:50 AM GMT
Mayuri

Mayuri

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் நேரில் சென்று கையளிக்கப்பட்டுள்ளன. 

GalleryGalleryGalleryGallery