எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 08, 2024 10:43 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், அவர் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு, அதனை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

தற்காலிக அடையாள அட்டை

அதன்படி, வாக்காளர்கள் தமது பகுதிக்குரிய கிராம சேவகர்களை சந்தித்து, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து, தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | President Election Sri Lanka

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW