அரச சேவை கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka Sri Lanka Government
By DHUSHI Feb 11, 2026 12:15 PM GMT
DHUSHI

DHUSHI

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஓதுக்கீடு

அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அரச சேவை கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | President Asks For A Short Deadline

அதேவேளை, டிட்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்காக எந்தவித பணமும் கடனாகப் பெறப்படவில்லை என்றும், எந்தவித பணமும் அச்சிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அந்தச் சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  அநுர குறிப்பிட்டார்.

மேலும், டிட்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளதாகவும், அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4% ஆகும் என்றும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.