கொழும்பின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு

Sri Lanka
By Nafeel Apr 24, 2023 03:41 PM GMT

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ உப மின் நிலையத்தின் மின் கடத்தல் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக கொழும்பின் 04, 05, 07, 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.