முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு

CID - Sri Lanka Police Kandy Rohitha Abeygunawardana
By Sivaa Mayuri Oct 21, 2024 03:30 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் பிராடோ ஜீப் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கண்டி அணிவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் இல்லத்தில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துறைமுக அதிகாரசபையில் உயர் பதவி

இந்த வாகனங்களை, குறித்த வீட்டில் உள்ள எவருக்கும் சட்ட ரீதியில் உரிமை கோர முடியவில்லை என்பதன் அடிப்படையில் அவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு | Police Seize Luxury Vehicles House Former Minister

கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் கார் விற்பனையை நடத்தும் அவரின் மருமகன், ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக இருந்த காலத்தில துறைமுக அதிகாரசபையில் உயர் பதவியில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக அவற்றை அரச பகுப்பாய்வாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு | Police Seize Luxury Vehicles House Former Minister