பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Police spokesman Sri Lanka Sri Lankan Peoples
By Kamal Sep 21, 2024 03:08 PM GMT
Kamal

Kamal

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

சட்டத்தை பாதுகாக்கும் தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Police Requested Public

கோரிக்கை

வாக்களிப்பு முடிவடைந்தது முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தேர்தல் வெற்றியை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.