வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Mar 31, 2025 10:30 AM GMT
Laksi

Laksi

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (30) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை- மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு:வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு:வெளியான அறிவிப்பு

கைது

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை மீட்டுள்ளனர்.

வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது | Person Was Arrested Kajamuthus In Valaichchenai

இதில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW