வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

Department of Immigration & Emigration
By Mayuri Jul 26, 2024 02:56 AM GMT
Mayuri

Mayuri

கடவுச்சீட்டு வழங்குதல் வரையறுக்கப்பட உள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடவுச்சீட்டு விநியோகம் வரையறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

இதனால் நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400ஆக வரையறுக்கப்பட உள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் தற்பொழுது கையிருப்பில் 40000 கடவுச்சீட்டு பாஸ் புத்தகங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல் | Passport Issuing In Sri Lanka

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக கடவுச்சீட்டு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ள காரணத்தினால் தற்பொழுது கடவுச்சீட்டுக்களைவிநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக ஒருநாள் சேவையில் 1200 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் நிலையில் தற்பொழுது அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல் | Passport Issuing In Sri Lanka

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

இதனால் வழமையான நடைமுறைகளில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW