அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயம்

Ampara
By Mayuri Aug 14, 2024 04:39 AM GMT
Mayuri

Mayuri

அம்பாறையில் பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது போக்குவரத்து பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGallery