ஒலுவில் வெளிச்சவீட்டு வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம்
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்திலுள்ள வெளிச்சவீட்டு வீதி நிர்மாண பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி குழு தவிசாளருமாகிய அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத வீதியாகவுள்ள வெளிச்ச வீட்டு கடற்கரை ஊடாக கரையோர வீதிக்கு கிரவல் இட்டு வீதி புணரமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக இணைப்பாளர் எஸ்.சத்தார் ஆசிரியர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.நியாஸ், 6ஆம் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முசாதீக், கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.வலீத் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














