மின்சார கட்டண குறைப்பு குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices NPP Government
By Rakshana MA Aug 07, 2025 04:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், இந்த அறிக்கையை சிலர் திரிபுபடுத்தி முன்வைத்துள்ளதாக நஜித் இந்திககுறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியா நகர சபை அமர்வில் கடும் வாய் தகராறு

கிண்ணியா நகர சபை அமர்வில் கடும் வாய் தகராறு

கட்ட குறைப்பு

மின்சாரக் கட்டணக் குறைப்பு, திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் கூறுவது போல்திரிபுபடுத்தி மின் கட்டணத்தைக் குறைப்பது சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார கட்டண குறைப்பு குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு | Npp Pledges Power Bill Reduction

முன்னதாக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்ட ஒரு காலம் இருந்ததாகவும், அதன் கடுமையான தாக்கத்தை மின்சார சபை இன்னும் எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்திடமிருந்து மக்கள் நிலையான மின்சாரக் கட்டணக் குறைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக மேலும் தெரிவித்துள்ளார்.  

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் : பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் : பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW