உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

Easter Easter Attack Sri Lanka Mujibur Rahman
By Rakshana MA Aug 09, 2025 10:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும், இந்த விவாதத்தை விரைவில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

ஓய்வூதிய நிலுவை தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஓய்வூதிய நிலுவை தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அம்பலமாகும் தகவல்

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஏற்கனவே இதில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள் | No Confidence Motion On Deputy Minister

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்த வேண்டுமானால், பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவது அவசியம் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறினார்.  

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

மட்டக்களப்பில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

மட்டக்களப்பில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW