நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Eastern Province
Nintavur
By Rakshana MA
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே இன்று (12 ) தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
புதிய பொறுப்பதிகாரி
இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும் பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









